கண்ணனுார்: கேரளாவின் செருபுழா அருகே அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் புத்தகமே தெய்வமாக வணங்கப்படுகிறது. அங்கு வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு புத்தகமே பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
கேரளாவின் கண்ணனுாரில் உள்ள செருபுழா பகுதியில் இருக்கும் நவபுரம் மாதாதீத்த தேவாலயம் 2021ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி திறக்கப்பட்டது.
கல்லில் வடிக்கப்பட்ட புத்தகமே அங்கு தெய்வமாக வணங்கப்படுகிறது.
காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிற்பி சந்தோஷ் மானசன் இந்த புத்தக மூலவரை வடிவமைத்துள்ளார்.
அங்கு அர்ச்சகர்களும் இல்லை, உண்டியலும் இல்லை. அனைத்து சமூகத்தினரும் அங்கு வழிபாடு நடத்தலாம். கடவுளாக வழிபாடு செய்யப்படும் புத்தகத்தில், “அறிவே கடவுள்; சமயம் என்பது பரந்த சிந்தனை; பணிவு கொண்ட அறிவே சிறந்த பாதை” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேவாலயத்தின் முன் மண்டபத்தில், ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஏக்கரில் அமைந்துள்ள அவ்வளாகத்தில், 3 தங்குவிடுதிகளும் உள்ளன. அவற்றில் எழுத்தாளர்கள் தங்கி தங்கள் எழுத்துப்பணியை மேற்கொள்ள அனுமதிக்கின்றனர்.
ஏப்ரல் மாதத்திலும் தசரா விடுமுறை நாள்களிலும் இங்கு கலாசார விழாக்கள் நடத்தப்படுகின்றன. இலக்கிய விவாதங்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
உலகில் புத்தகமே தெய்வமாக வழிபடப்படும் ஒரே கோவில் இதுதான் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.