புதுடெல்லி: வரும் 2029ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 62,500 கிலோமீட்டர் தொலைவிற்கு கிராமப்புறங்களில் புதிய சாலைகள் அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ.49,000 கோடியும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பங்காக ரூ.21,000 கோடியும் அளிக்கப்படும்.
நாடு முழுவதும் ஏற்கெனவே 7.66 லட்சம் கிலோமீட்டர் தொலைவிற்குக் கிராமப்புறங்களில் புதுச் சாலைகள் போடப்பட்டுள்ளன.
எத்தகைய பருவநிலைகளுக்கும் தாக்குப்பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலைகள் கிராமப்புறப் பகுதிகளில் சமூக, பொருளியல் மாற்றங்களுக்கும் மேம்பாட்டிற்கும் வினையூக்கியாக அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

