தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜிஎஸ்டி குறைப்பு: மாநிலங்களுக்கு 5 ஆண்டு இழப்பீடு கோருகிறது காங்கிரஸ்

2 mins read
6cfd21da-5763-45b6-ad5a-dd5ff5e05cd6
மத்திய அரசு தற்போது ஜிஎஸ்டியை சீரமைத்துள்ளது நல்ல விஷயம் என காங்கிரஸ் வரவேற்றுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி என்னும் சரக்கு, சேவை வரி குறைக்கப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு சரிக்கட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஜிஎஸ்டி முறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் புதிய ஈரடுக்கு வரிமுறை நடப்புக்கு வருகிறது.

ஆனால், இந்தச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு பத்தாண்டு காலமாகத் தமது கட்சி வலியுறுத்தி வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிட்​டத்​தட்ட 10 ஆண்டு கால​மாக ஜிஎஸ்​டியை எளிமைப்​படுத்த வேண்டும் என்று காங்​கிரஸ் கோரி வரு​கிறது. 

“மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி என்​பதை ஒரு நாடு 9 வரி​கள் என மாற்​றியது. அதில், 0%, 5%, 12%, 18%, 28% மற்​றும் 0.25%, 1.5%, 3% மற்​றும் 6% என்ற சிறப்பு வரி விகிதங்​களும் அடங்​கும். 

“2019 மற்​றும் 2024 தேர்​தல் அறிக்​கை​யில் எளிமை​யான ஜிஎஸ்டி முறையை காங்​கிரஸ் கோரி​யிருந்​தது.

“மொத்த ஜிஎஸ்​டி​யில் மூன்​றில் இரண்டு பங்கு அதாவது 64% வசூல் ஏழைகள் மற்​றும் நடுத்தர வர்க்​கத்​தினரின் பைகளில் இருந்து வரு​கிறது. ஆனால், கோடீஸ்​வரர்​களிட​மிருந்து 3% வரி மட்​டுமே வசூலிக்​கப்​படு​கிறது.

“அதே​நேரம், அவர்​களுக்குச் சாதக​மாக கார்ப்​பரேட் வரி 30%லிருந்து 22ஆக குறைக்​கப்​பட்​டது. 

“எட்டு ஆண்​டு​களாக தூக்​கத்​தில் இருந்த மோடி அரசு தற்​போது விழித்​துக்​கொண்டு ஜிஎஸ்​டியை மறுசீரமைத்​துள்​ளது. இது ஒரு நல்ல விஷ​யம். அதே​நேரம், ஜிஎஸ்டி குறைப்​பால் வரு​வாய் இழப்பு ஏற்படும் மாநிலங்​களுக்கு அந்த இழப்பை மத்​திய அரசு ஐந்தாண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்​டும்,” என்று தெரிவித்துள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.

குறிப்புச் சொற்கள்