தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜிஎஸ்டி குறைப்பு; ஆடம்பரப் பொருள்களுக்கு அதிக வரி

2 mins read
cccb33e9-c65f-4e8c-b7ef-603989b6fb2e
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் உள்நாட்டுச் சந்தை பெரும் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்​திய நிதி​யமைச்​சு திட்​ட​மிட்டு உள்​ளது. இதன்​படி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், ஆட்டோமொபைல்ஸ், கைப்பேசிச் சாதனங்கள், கணினி உள்​ளிட்ட பொருள்களின் விலை கணிச​மாகக் குறை​யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஆடம்பரப் பொருள்களுக்கு 40 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 15ஆம் தேதி, சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இப்​போது ஜிஎஸ்டி கட்​டமைப்​பில் 5%, 12%, 18%, 28% என 4 வரி அடுக்​கு​கள் உள்​ளன. ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கை நடப்புக்கு வந்ததும் 5%, 18% என்ற இரு வரி அடுக்​கு​கள் மட்​டுமே இருக்​கும்.

இப்போதுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு நடை​முறை​யில் 90 விழுக்காட்டுப் பொருள்கள் 28 விழுக்காடு வரி வரம்​பின் கீழ் உள்​ளன. இந்தப் பொருள்கள் அனைத்​தும் 18 விழுக்காடு வரி வரம்​பின் கீழ் கொண்டு வரப்​படும். இதன்​படி கார், மோட்டார் சைக்கிள், சிமென்ட், குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், கைப்பேசி, கணினி உள்​ளிட்ட பெரும்​பாலான பொருள்கள் 18 விழுக்காடு வரம்​பின் கீழ் வரும் எனத் தெரிகிறது.

இப்போது 28 விழுக்காடு வரி செலுத்தப்படும் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் யாவும் 18 விழுக்காடு வரி வரம்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. இதன் மூலம் கட்​டு​மானச் செலவு குறை​யும். வீடு​களின் விலை​யும் குறை​யும். இதனால் வீட்டு வசதித் துறை அபார வளர்ச்சி அடை​யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகை​யிலைப் பொருட்​கள், மது​பானங்​கள், இணைய விளை​யாட்டு மற்​றும் ஆடம்பரப் பொருள்​களுக்கு மட்​டும் 40 விழுக்காடு வரி விதிக்​கப்​படும். சொகுசு கார், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இந்த வரி வரம்​பின் கீழ் கொண்டு வரப்​படும்.

ஆடம்பரப் பொருள்​கள் மற்​றும் உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்​கும் போதைப் பொருள்​கள் அனைத்​துக்​கும் 40 விழுக்காடு வரி விதிக்​கப்​படும்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைச் செயல்படுத்த ஒத்துழைக்குமாறு மாநில அரசுகளை வலியுறுத்தினார். மேலும் இந்தத் திட்டங்களால் குடிமக்கள் இரட்டிப்புப் பயன்களைப் பெறுவர் என்று கூறியுள்ளார்.

ஜிஎஸ்டியை வெளிப்படையான, எளிய வரி முறையாக ஆக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்​தியப் பொருள்​கள் மீது அமெரிக்கா 50% வரி வி​தித்​திருப்​ப​தால் பல்​வேறு பொருளா​தாரச் சவால்​கள் எழுந்துள்​ளன. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் உள்நாட்டுச் சந்தை பெரும் வளர்ச்சி காணும். அதனால் நாட்டின் பொருளாதாரம் அதிவேகமாக வளரும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்