சக ஊழியர்களை அச்சுறுத்திய ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் பணியிடை நீக்கம்

இந்தியாவின் கோல்கத்தா நகரில் செயல்படும் ஹெச்டிஎப்சி வங்கி ஒன்றில் மேலாளர் ஒருவர் தமது சக ஊழியர்களை அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளார். 

அதைத்தொடர்ந்து அந்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மேலாளரும் வங்கி ஊழியர்களும் காணொளி வாயிலாக சந்திப்பை நடத்தியுள்ளனர். அப்போது மேலாளர், வங்கியின் காப்புறுதிகளைப் போதிய அளவில் விற்காத காரணத்தால் சக ஊழியரை பயங்கரமாகத் திட்டியும் மிரட்டியும் உள்ளார்.

அதன் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஹெச்டிஎப்சி வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மரியாதையாகவும் பொறுப்புடனும் நடத்தப்படுவது உறுதிசெய்யப்படும் என்றும் ஹெச்டிஎப்சி குறிப்பிட்டது. 

வங்கியின் விற்பனைப் பிரிவுகளில் இருக்கும் ஊழியர்கள் இதுபோன்று அடிக்கடி அச்சுறுத்தப்படுவதாக இணையவாசிகளும் விற்பனைப்பிரிவில் உள்ளவர்களும் லிங்ட்இன் வாயிலாக தெரிவித்துள்ளனர். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!