லக்னோ: வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை வெள்ளிக்கிழமை (மார்ச் 14) கொண்டாடப்பட உள்ளது.
வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் ஜும்ஆ தொழுகையை மேற்கொள்வார்கள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோலிப் பண்டிகையும், ஜும்ஆ தொழுகை தினமும் ஒரே நாளில் வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு ‘சவுபாய்’ என்ற பேரணி நடைபெற உள்ளது.
இந்தப் பேரணிக்கான பாதையில் கிட்டத்தட்ட 10 பள்ளிவாசல்கள் உள்ளன. அந்த 10 பள்ளிவாசல்களையும் திரையிட்டு மூடுவதற்கு உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாகச் சம்பல் காவல்துறை அதிகாரி எஸ்.பி. சிரீஷ் சந்திரா கூறுகையில், “சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் இரு சமூகத்தினரும் தங்களது பண்டிகைகளை முழு மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுவதற்கு வசதியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார்.