தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏழுமலையானுக்கு வீடு, பணம் தானம்; உயில் எழுதி வைத்த அதிகாரி

1 mins read
4a330973-bace-4f7c-9152-425c099a00c7
மறைந்த  ஒய்​.​வி.எஸ்​.எஸ். பாஸ்​கர் ராவின் உறவினர்​கள் திரு​மலைக்கு வந்​து தேவஸ்​தான கூடு​தல் நிர்​வாக அதிகாரியான வெங்​கைய்ய சவுத்​ரி​யிடம் வீட்டுப் பத்திரம், வங்கிக் கணக்குப் புத்தகங்களை ஒப்​படைத்​தனர். - படம்: ஊடகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு தனது சொத்து, பணத்தை நன்கொடையாக வழங்கிவிடுமாறு ஒருவர் இறப்பதற்கு முன் உயில் எழுதி வைத்துள்ளார்

ஹைத​ரா​பாத் வனஸ்​தலிபுரத்​தில் வசித்த ஓய்​வு​பெற்ற ஐஆர்​எஸ் அதி​காரி ஒய்​.​வி.எஸ்​.எஸ். பாஸ்​கர் ராவ், ஏழு​மலையானின் தீவிர பக்​தர்.

தனது இறப்​புக்கு பிறகு தனது வீடு மற்​றும் சேமிப்புத் தொகையை ஏழு​மலை​யானுக்கு வழங்க வேண்​டும் என உயில் எழுதி வைத்​திருந்​தார்.

இந்த ​நிலை​யில் பாஸ்​கர் ராவ் உடல்​நலக்​குறை​வால் அண்மையில் உயி​ரிழந்​தார்.

இதையடுத்து அவரது வீட்​டுப் பத்​திரம், வங்​கிக் கணக்கு புத்​தகம் மற்​றும் உயி​லின் நகல் உள்ளிட்டவற்றை அவரது உறவினர்​கள் வியாழக்கிழமை அன்று (ஜூலை 24) திரு​மலைக்கு வந்​து தேவஸ்​தான கூடு​தல் நிர்​வாக அதிகாரியான வெங்​கைய்ய சவுத்​ரி​யிடம் ஒப்​படைத்​தனர்.

காலஞ்சென்ற பாஸ்​கர் ராவின் 3,500 சதுர அடி வீட்​டின் தற்​போதைய மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

அவர் தனது வங்​கிக் கணக்​கில் ரூ.66 லட்​சம் சேமித்து வைத்​திருந்​தார்.

வீட்டை ஆன்​மிக நிகழ்ச்​சிகளுக்​கும் சேமிப்புப் பணத்தை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் பல்​வேறு அறக்கட்டளைகளுக்​கும் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும் என்று அவர் உயி​லில் குறிப்​பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்