தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதச் சூதாட்டச் செயலி: நடிகை ஊர்வசிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

1 mins read
7b80ce02-6abc-4656-b26e-7d1e8760a8a9
நடிகை ஊர்​வசி ரவுதேலா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் சட்​ட​விரோத சூதாட்டச் செயலிகள் மூலம் ஏராள​மான முதலீட்​டாளர்​களின் கோடிக்கணக்​கான பணத்தை மோசடி செய்​ததுடன் வரி ஏய்ப்பு செய்​த​தாக​வும் புகார் எழுந்​துள்​ளது.

இதுகுறித்து அமலாக்​கத் துறை வழக்குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கிறது.

தற்போது 1xBet நிறு​வனத்​துக்கு எதி​ரான பண மோசடி வழக்கை அமலாக்​கத் துறை விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கு தொடர்பில் பல நடிகர்​கள் மற்றும் கிரிக்​கெட் வீரர்​களிடம் அமலாக்​கத் துறை ஏற்​கெனவே விசா​ரணை நடத்​தி​யது.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் உள்ள அமலாக்​கத் துறை தலைமை அலு​வல​கத்​தில் திங்​கட்கிழமை (செப்டம்பர் 15) முன்னிலையாக வேண்​டும் என திரிணாமுல் காங்​கிரஸ் கட்சியின் முன்​னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்​கர​வர்த்​திக்கு அழைப்பாணை அனுப்​பப்​பட்​டுள்​ளது.

அதேபோல், செவ்​வாய்க்​கிழமை (செப்டம்பர் 16) முன்னிலையாக வேண்​டும் என நடிகை ஊர்​வசி ரவுதேலா​வுக்கு அழைப்பாணை அனுப்​பப்​பட்​டுள்​ளது.

நாடு முழு​வதும் 22 கோடி பேர் சூதாட்டச் செயலிகளைப் பயன்படுத்துவதாகவும் இதில் பாதிப் பேர் தொடர்ந்து அதனைப் பயன்​படுத்​து​வ​தாக​வும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்