பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஹெலிகாப்டர் பயன்பாடு அதிகரிப்பு

1 mins read
ac21c207-4b1f-4c92-8c9d-c09d16ad8b0d
கட்சிகள் பீகார் சட்டமன்றத் தேர்தலில் கடுமையாகப் போட்டியிடுகின்றன. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தல் பிர​சா​ரம் சூடு​பிடித்​துள்​ளது. பிர​சா​ரத்​துக்கு அனைத்துக் கட்சித் தலை​வர்​களும் 15 ஹெலி​காப்​டர்​களை வாடகைக்கு எடுத்​துள்​ளனர். இந்த எண்​ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டு தேர்​தலில் பயன்படுத்தப்பட்டதைவிட ஒன்​றரை மடங்கு அதி​க​மாகும்.

ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) தலை​மையி​லான எதிர்க்​கட்​சிகளின் மாபெரும் கூட்​ட​ணி​ நான்கு ஹெலி​காப்​டர்​களையும் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யு) இரண்டு ஹெலிகாப்டர்களையும் பாஜக 9 ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்துகின்றன.

இதனால், பாட்னா விமான நிலை​யத்தில் ஹெலிகாப்டர் போக்குவரத்தும் மக்கள் கூட்டமும் அதிகமாக உள்ளது.

பீகார் முதல்​வர் நிதிஷ்கு​மார், கூட்​ட​ணி​யின் முதல்வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தனித்​தனி ஹெலி​காப்​டர்​களைப் பயன்​படுத்​துகின்​றனர்.

காங்​கிரஸ் கட்சியின் நான்கு இருக்​கைகள் கொண்ட இரண்டு ஹெலி​காப்​டர்​களில் ஒன்று தனி​யாகப் பூர்​ணியா நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாத​வுக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

மற்​றொன்றை காங்​கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உட்பட மற்ற தலைவர்கள் பயன்​படுத்​துகிறார்​கள். ஹெலி​காப்​டரை முன்​ப​திவு செய்​வதற்கு 3 மணி நேரத்துக்குப் பொருள், சேவை வரியுடன் சேர்த்து கட்ட​ணம் கிட்டத்தட்ட ரூ.10 லட்​சத்து 6,200 ஆகும்.

முன்​ப​திவு செய்த ஹெலி​காப்​டரைப் பிரசா​ரத்​துக்குப் பயன்​படுத்​தா​விட்​டாலும் கட்​ட​ணம் செலுத்த வேண்​டும். இந்நிலையில், பீகாரில் வளர்ச்சி அடை​யாத கிராமங்​களில் ஹெலி​காப்​டர்​களைக் காண கூட்​டம் கூடு​கிறது.

இந்தக் கூட்​டம் அரசி​யல் தலை​வர்​களின் பிர​சா​ரம் முடி​யும் வரை காத்​திருக்​கிறது. பிர​சா​ரம் முடிந்து கட்சிப் பிர​முகர்​கள் திரும்பிச் செல்​லும் போதும் ஹெலி​காப்​டர் பறப்​பதை வேடிக்கை பார்க்​கின்​றனர்.

குறிப்புச் சொற்கள்