உலகளவில் பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது இந்தியா: மத்திய அமைச்சர்

1 mins read
3ab7d202-baad-43fc-8431-ecd6cbad34c1
பால் உற்பத்தி. - படம்: கோப்புப் படம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் பேசினார். அப்போது, “மோடி அரசு கடந்த 2014ஆம் ஆண்டு ராஷ்டிரீய கோகுல் மிஷன் என்ற திட்டத்தை தொடங்கியது.

“அப்போதிலிருந்து நாட்டில் பால் உற்பத்தி 63.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில், பால் உற்பத்தி மேலும் 15 விழுக்காடு அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

“தற்போது, உலகிலேயே பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு இந்தியாதான். 23 கோடியே 90 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில், பால் உற்பத்தியை 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

“இந்தியாவில், 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 75 விழுக்காட்டினர் பெண்கள். இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம் ஆகும்.

“ராஷ்டிரீய கோகுல் மிஷனின் நோக்கம், உள்நாட்டு கால்நடை இனங்களை பராமரித்து, மேம்படுத்துவதுடன், பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரித்து, பால் உற்பத்தியைப் பெருக்குவது ஆகும். இதன்மூலம், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

“இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் சேவை வழங்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்