இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே பயங்கரவாத முறியடிப்பு உடன்பாடு

2 mins read
783aa303-464a-48a4-a2f1-3bc5d5c4f619
இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெரை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி. அருகில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் தற்காப்பு தொடர்பான உடன்பாடுகள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) கையெழுத்தாக உள்ளன.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தற்காப்புப் பங்காளித்துவ உடன்பாட்டில் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கஜா கல்லாஸும் கையெழுத்திடுவார்கள் என்று சில தகவல்கள் தெரிவித்தன.

கடல்துறை பாதுகாப்பு, இணையம் தொடர்பான விவகாரங்கள், வெவ்வேறு அச்சுறுத்தல்கள், பயங்கரவாத முறியடிப்பு, திட்டமிட்டு நிறைவேற்றப்படும் குற்றச்செயல்கள் ஆகியன தொடர்பாக இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை அந்த உடன்பாடுகள் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 77வது குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர், ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் ஆண்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

அந்த இரு தலைவர்களையும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

அதன் பிறகு அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

ஐரோப்பிய தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இந்திய - ஐரோப்பிய ஒன்றிய உறவில் புதிய சகாப்தத்திற்கான சாத்தியம் உள்ளதாகக் கூறினார்.

இந்​தி​யா​வுக்கு வருகை தந்​துள்ள அமெரிக்க நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் குழு​வையும் எஸ்.ஜெய்​சங்​கர் டெல்​லி​யில் சந்​தித்​துப் பேசி​னார்.

இரு நாடுகளுக்கு இடையில் வர்த்​தகம் மற்​றும் பாது​காப்பு தொடர்​பாக இந்​தச் சந்​திப்​பின்​போது விரி​வான ஆலோசனை நடத்​தப்​பட்​டது. அமெரிக்க எம்​.பி.க்​கள் ஜிம்மி பாட்​ரோனிஸ், மைக் ரோஜர்ஸ் மற்​றும் ஆடம் ஸ்மித் ஆகியோர் அடங்​கிய இந்​தக் குழு​வினருடன் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்​கத் தூதர் செர்​ஜியோ கோரும் பங்​கேற்​றார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் அவர் கூறுகையில், “அமெரிக்க எம்​.பி.க்​களு​ட​னான பேச்​சு​வார்த்தை மிக​வும் சிறப்​பாக அமைந்​தது. இந்​தியா - அமெரிக்கா இடையி​லான பல்​வேறு உறவு​கள், இந்​தோ-பசிபிக் பிராந்​திய நில​வரம் மற்​றும் உக்​ரேன் போர் ஆகியவை குறித்து விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது.

“இரு நாடு​களுக்கு இடையி​லான உறவில் அமெரிக்க நாடாளு​மன்​றத்​துட​னான தொடர்​பு​கள் எப்​போதும் முக்​கிய அங்​க​மாக இருந்து வரு​கின்​றன,” என்றார்.

அமெரிக்​கத் தூதர் செர்​ஜியோ கோர் வெளி​யிட்ட பதி​வில், “பாது​காப்​பு, வர்த்​தகம் மற்​றும் முக்​கிய தொழில்​நுட்​பங்​கள் ஆகிய​வற்​றில் ஒத்​துழைப்பு வழங்​கு​வதன் மூலம் இரு நாட்டு உறவை வலுப்​படுத்​து​வது குறித்து ஆக்​கப்​பூர்​வ​மான வகை​யில் விவா​திக்​கப்​பட்​டது” எனத் தெரி​வித்​துள்​ளார்.

குறிப்புச் சொற்கள்