பிப்ரவரியில் 146 ஆண்டு காணாத வெப்பம்

இந்தியாவில் 1877ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 146 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 பிப்ரவரியில்தான் கடும் வெப்பம் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பிப்ரவரி மாத சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் என்றும் ஆனால் இந்த பிப்ரவரியில் வெப்பம் 29.54 டிகிரி செல்சியசாக பதிவானதாகவும் இந்த அளவு இதற்கு முன் 1877 ஆம் ஆண்டில்தான் பதிவாகி உள்ளளதாகவும் மையம் கூறியது.

கடும் வெப்பநிலை தொடரும் என்பதால் மார்ச் முதல் மே வரையில் குறிப்பாக கோதுமை அதிகம் பயிரிடப்படும் வட மாநிலங்களில் அனல் காற்று வீசும் என்றது மையம். 

வெப்பம் தொடரும் பட்சத்தில் கோதுமை உள்ளிட்ட உற்பத்தி குறையும் என்றும் அதன் காரணமாக உணவு விலையைக் குறைக்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் தெரிகிறது. 

இந்தியா ஆண்டுக்கு ஒரே ஒரு முறைதான் கோதுமை பயிர் செய்கிறது. அக்டோபர், நவம்பரில் தொடங்கி மார்ச் வரை அறுவடை நடக்கும்.

கடும் வெப்பம் காரணமாக சென்ற ஆண்டில் இந்தியாவில் கோதுமை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடைவிதித்தது.

கோடையில் மின்சாரத் தேவை அதிகரிக்கும். இதனால் மின்சாரம் பற்றாக்குறை நிலைகூட வரலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் வழக்கத்தைவிட 68% குறைவாக மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!