நாடுகள் ஒன்று மற்றொன்றுக்கு எதிரான வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள அனைத்துலக வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை, திட்டங்கள் தீட்டுவதன் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா்.
மும்பை பங்குச் சந்தையின் 150ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவா், “நாடுகள் ஒன்று மற்றொன்றுக்கு எதிராக வரி விதிப்பதால் அனைத்துலக விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்படுகிறது. அத்துடன், பொருள்களை உற்பத்தி செய்யும் செலவும் அதிகமாகிறது. இது பல நாடுகள் முதலீடு செய்வதில் சிரமங்களை உருவாக்குகிறது.
இதன் தொடர்பில் ஏற்படும் வா்த்தக சவால்களை சமாளிக்க இந்தியா விரைந்து கொள்கைகளை வகுப்பது, தொலைநோக்கு பாா்வையுடன் திட்டங்களைத் தீட்டுவதன் மூலம் உறுதியாக எதிா்கொள்ளும்.
வா்த்தக மறுசீரமைப்பு என்பது பெரும் சவாலாக உள்ளது. தற்போதைய நிலையில், வலுவான பொருளியல் அடிப்படையைக் கொண்டுள்ளதால் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளது. முதலீட்டாளா்களுக்கு நிலையான வளா்ச்சியை இந்தியா வழங்குகிறது. உள்நாட்டு செயல்திறன், போட்டித்தன்மையை அதிகரிப்பது போன்றவற்றால் பொருளியலை வலுப்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்திய பங்குச் சந்தை மீது சிறு முதலீட்டாளா்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதில் பெண்கள், இளையர்களின் பங்கும் அதிகமாக உள்ளது. ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டால்கூட அவா்களின் நம்பிக்கையை தகா்த்துவிடும்.
பொருளியல் வளா்ச்சி பயணத்தில் இந்தியாவின் நிலை உறுதியாக உள்ளதால், விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளியலாக இந்தியா மாறும். இந்தியப் பொருளியலின் வளா்ச்சித் திறனை இந்திய பங்குச் சந்தைகள் பிரதிபலிக்கின்றன,” என்று அவர் கூறினார்.