புதுடெல்லி: வீரத்திற்குப் பெயர்போன மராட்டிய மன்னனான வீர சிவாஜியின் சிலையை 14,300 அடி உயரத்தில் நிறுவியுள்ளது இந்திய ராணுவம்.
கிழக்கு லடாக் பகுதியில், சீன எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டி, பங்கோங் ஏரிக்கரையில் வீர சிவாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
லே பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவத்தின் ‘14 கார்ப்ஸ்’ படைப்பிரிவு கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 26) இச்சிலையைத் திறந்துவைத்தது.
“வீர சிவாஜியின் அசையாத மனவுறுதியைக் கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. அவரது வீர மரபு, அவருக்குப் பின் வந்த எல்லாத் தலைமுறையினருக்கும் ஊக்குவிப்பாகத் திகழும்,” என்று ‘14 கார்ப்ஸ்’ படைப்பிரிவைச் சேர்ந்த லெஃப்டினன்ட் ஹிதேஷ் பல்லா கூறினார்.
உத்திகளை வகுப்பதில் பண்டைய இந்திய மன்னர்களின் நுண்ணறிவைச் சமகால இராணுவச் செயற்களத்துடன் ஒருங்கிணைக்க இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

