அபு​தாபி லாட்​டரி​யில் ரூ.36 கோடி வென்ற இந்தியர் மனைவியைப் பார்க்க தாயகம் திரும்ப விருப்​பம்

அபு​தாபி லாட்​டரி​யில் ரூ.36 கோடி வென்ற இந்தியர் மனைவியைப் பார்க்க தாயகம் திரும்ப விருப்​பம்

1 mins read
82ae6232-004d-464b-96d6-b8daf0bc6661
லாட்​டரி குலுக்கில் ரூ.30 கோடி பரிசை வென்ற சந்​தீப் குமார் பிர​சாத்.  - படம்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: அபு​தாபி​யில் பணியாற்றி வரும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்​தீப் குமார் பிர​சாத் (30) என்​பவருக்கு, லாட்டரியில் 15 மில்​லியன் திர்​ஹாம் பரி​சாகக் கிடைத்​துள்​ளது.

இது இந்​திய மதிப்​பில் ரூ.36 கோடி​யாகும்.

இதுகுறித்து சந்​தீப் குமார் கூறுகையில், “துபாய் டிரை​டாக்​ஸில் தொழில்​நுட்ப வல்​லுந​ராகப் பணி​யாற்றி வரு​கிறேன்.

“அண்மையில் நான் வாங்கியிருந்த ஒரு லாட்டரிச் சீட்டு ஒரே நாள் இரவில் என்னை கோடீஸ்வரனாக்கி விட்டது.

“என் வாழ்க்​கை​யில் இதுபோன்ற ஒரு மகிழ்ச்​சி​யான தருணத்தை நான் சந்​திப்​பது இதுவே முதல் முறை.

“கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதியன்று 200669 என்ற எண் கொண்ட லாட்​டரிச் சீட்டை வாங்​கினேன்.

“செப்​டம்​பர் 3ஆம் தேதி நடந்த குலுக்கலில் எனது சீட்டுக்கு 15 மில்​லியன் திர்​ஹாம் பரி​சாகக் கிடைத்​துள்​ள​தாக தொகுப்​பாளர் ரிச்​சர்ட் அறி​வித்தார்.

“அப்போது, ‘சுத்துதே சுத்துதே பூமி’ என பாட்டுப் பாடி, நடனமாடத் தோன்றியது. என் வாழ்க்​கையே தலைகீழாக மாறி​விட்​டது,” என்றார்.

உத்தரப் பிரதேசத்​தில்​தான் தனது மனை​வியும் இரண்டு சகோதரர், ஒரு சகோதரியும் வசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இவ்​வளவு பெரிய பரிசுத்தொகையை வென்​றுள்ள நிலை​யில், எனது குடும்​பத்தினருடன் சேர்ந்திருக்க இந்​தியாவுக்குத் திரும்ப ஆர்​வ​மாக உள்​ளேன். அங்கு சொந்தத் தொழிலை​யும் தொடங்க விரும்​பு​கிறேன்,” என்று சந்​தீப் குமார் பிர​சாத் தெரி​வித்​துள்ளார்.

குறிப்புச் சொற்கள்