கைப்பேசிக்காக நீர்த்தேக்கத்திலிருந்த 2.1 மில்லியன் லிட்டர் நீரை வெளியேற்றிய அதிகாரி

இந்தியாவில் நீர்த்தேக்கம் ஒன்றில் தவறவிட்ட கைப்பேசிக்காக கிட்டத்தட்ட 2.1 மில்லியன் லிட்டர் நீரை வெளியேற்றியுள்ளார் ஓர் அதிகாரி.

அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தியதற்காக அந்த அதிகாரி தற்போது தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. 

சம்பவம் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பரல்காட் நீர்த்தேக்கத்தில் நடந்தது. 

கைப்பேசியை நீர்த்தேகத்தில் இருந்து மீட்கத் தொடர்ந்து நான்கு நாள்களாக கிட்டத்தட்ட 2.1 மில்லியன் நீர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

கோடைகாலமான இந்த நேரத்தில் இவ்வளவு நீரை வீணடித்த அதிகாரி மீது பொதுமக்களும் கோபமடைந்தனர்.

ராஜே‌ஷ் விஸ்வாஸ் என்ற அதிகாரி கிட்டத்த 1,640 வெள்ளி மதிப்புள்ள சாம்சுங் கைப்பேசியை மே 21ஆம் தேதி தமது நண்பர்களுடன் படம் எடுக்கும் போது நீர்த்தேக்கத்தில் தவறவிட்டுள்ளார்.

கைப்பேசியை எடுக்க முக்குளிப்பாளர்கள் சிலர் பயன்படுத்தப்பட்டனர். இருப்பினும் கைப்பேசியை எடுக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து அதிகாரி நீரை நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார். வெளியேற்றப்பட்ட நீரால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இருப்பினும் அதை அவ்வட்டார விவசாயிகள் மறுத்துள்ளனர். இச்சம்வத்தால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இவ்வளவு நீர் வெளியேற்றப்பட்ட பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அந்த கைப்பேசி இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!