புதுடெல்லி: கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காவல்துறைத் தலைவரான டெல் மனக், 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 27ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
வான்கூவர், விக்டோரியா காவல்துறையில் அவர் பணியாற்றி வந்தார்.
வான்கூவரில் பிறந்து வளர்ந்த டெல் மனக், கடந்த 1990ல் அந்நகர காவல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். அவரது குடும்பம் பஞ்சாபில் உள்ள நவான்ஷர் மாவட்டத்தின் ஷாஹீத் பகத் சிங் நகரைச் சேர்ந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின் விக்டோரியா நகர காவல் துறையில் சேர்ந்து சாதனை படைத்தார். ஏனெனில், அதன் 168 ஆண்டுகால வரலாற்றில் வெள்ளையர் அல்லாத முதல் அதிகாரி இவர்.
டெல் மனக், கடந்த 2017ல் விக்டோரியா காவல்துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்றார். இதன் மூலம் அந்நாட்டின் காவல் துறைத் தலைவர் பதவிக்கு உயர்ந்த முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பல்வேறு காவல்துறைப் பிரிவுகளில் 35 ஆண்டுகளாக பணியாற்றிய பின் அண்மையில் அவர் பணி ஓய்வு பெற்றார்
டெல் மனக்கை கௌரவிக்கும் விதமாக விக்டோரியா நகரம், அவர் ஓய்வு பெற்ற நாளான ஆகஸ்ட் 27ம் தேதியை ‘டெல் மனக் தினம்’ என அறிவித்துள்ளது.
கனடாவில் குற்றமற்ற நாடாக ஆக்குதல், மனித கடத்தல் மற்றும் சட்ட அமலாக்கத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தல் குறித்த தேசிய காவல்துறை கொள்கைகளுக்கு திரு. மனக் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளார்.