கிரிக்கெட் விளையாடியபின் தண்ணீர் குடித்த இளையர் உயிரிழப்பு

லக்னோ: கிரிக்கெட் விளையாடியபின் தண்ணீர் குடித்ததும் 17 வயது இளையர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 30) நிகழ்ந்தது.

ஹசன்பூரைச் சேர்ந்த பிரின்ஸ் சைனி என்ற அந்த இளையர் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார்.

சம்பவ நாளன்று அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்.

போட்டி முடிந்ததும் அவர் தண்ணீர் அருந்தியதாகவும் உடனடியாக மயங்கி விழுந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

உடனே பிரின்சின் நண்பர்கள் அதுபற்றி அவருடைய பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பிரின்ஸ் விரைந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரின்ஸ் இறந்ததற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதன் தொடர்பில் பிரின்சின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!