இந்தியாவில் குழந்தை பாலியல் உள்ளடக்க விவகாரம்: ‘மெட்டா’ பதில்

இந்தியாவில் குழந்தை பாலியல் உள்ளடக்க விவகாரம்: ‘மெட்டா’ பதில்

1 mins read
b9168caf-fff4-4e43-8c65-8274de641480
சமூக ஊடகப் பாதுகாப்பு விவகாரத்தில் கவனம் செலுத்தி வருவதாக ‘இன்ஸ்டகிராம்’ தலைமை நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்களை இன்ஸ்டகிராம் வெளியிட்டதாக புகார்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்கும் வகையில், இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்புமாறு மத்திய தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தமது அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அந்த அழைப்பாணை குறித்து மெட்டா நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

இருப்பினும், இன்ஸ்டகிராம் விளம்பரங்களில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் இருப்பதை வெளிப்படுத்திய பிபிசி புலனாய்வுக்கு அது பதிலளித்தது.

இதுபோன்ற உள்ளடக்கங்களைக் கோருவதையோ பகிர்ந்துகொள்வதையோ மெட்டா நிறுவனம் சகித்துக்கொள்ளாது என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த தனது குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் மெட்டா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தனியுரிமையை அதிகரிப்பதாகக் கூறும் ஒரு நடவடிக்கையாக, பயனர்கள் தங்களுக்கென ஒரு பெயரை முன்பதிவு செய்ய வாட்ஸ்அப் அனுமதிக்கத் தொடங்கியுள்ளது.

ஆனால், 600 மில்லியன் பயனர்களுடன் வாட்ஸ்அப்பின் ஆகப்பெரிய சந்தையாகத் திகழும் இந்தியாவில், அந்நிறுவனம் மத்திய அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்