லக்னோ: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கிய தொழிற்சாலை எனப் பெயர் பெற்றுள்ளது மதோபட்டி கிராமம்.
இது, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமமாகும்.
கடந்த நூற்றாண்டில் மட்டும் இக்கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐஎப்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எனவே, இந்தியாவின் ஐஏஎஸ் தொழிற்சாலை என்ற புனைப்பெயரை மதோபட்டி பெற்றுத் தந்துள்ளது.
கடந்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜாதோபட்டி கிராமத்தைச் சேர்ந்த முஸ்தபா ஹுசைன் என்பவர், மாதோபட்டி கிராமத்தில் இருந்து தேர்வான முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற சாதனையைப் படைத்தார்.
இதனால் நினைத்தாலும் நாமும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் பெற்ற மதோபட்டி இளையர்கள் பலரும் குடிமைப் பணித் தேர்வில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
இத்தனைக்கும் இக்கிராமத்தில் குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையம் எதுவுமே இல்லை. எனினும் ஏற்கெனவே தேர்வில் வெற்றிபெற்று பதவியில் உள்ள அதிகாரிகள் கிராம இளையர்களுக்குப் புத்தகங்கள், குறிப்புகள் மற்றும் உத்திகள் மூலம் வழிகாட்டுதல் வழங்கி வருகின்றனர்.
இதனால் பள்ளிப் பருவம் முதலே குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கி விடுகின்றனர் மதோபட்டி குழந்தைகள்.
தொடர்புடைய செய்திகள்
ஐஏஎஸ் அதிகாரிகளாக உருவெடுக்க இயலாதவர்கள் இஸ்ரோ, பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட மற்ற இடங்களில் பணி வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

