இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.1.2 கோடி அபராதம்

புதுடெல்லி: மலிவுக்கட்டண இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோவிற்கு விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புச் செயலகம் ரூ.1.2 கோடி (S$195,750) அபராதம் விதித்துள்ளது.

விமானம் வானில் பறக்க தாமதமான நிலையில், விமானத்தைவிட்டுக் கீழே இறங்கிய பயணிகள், தார்ச்சாலையிலேயே அமர்ந்து உண்ட காணொளி அண்மையில் இணையத்தில் பரவலானது.

இதனையடுத்து, அச்சம்பவம் நிகழ்ந்த மும்பை விமான நிலையத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது; விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புச் செயலகம் ரூ.60 லட்சம் அபராதம் விதித்தது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் விளக்கம் அளிக்கும்படி இண்டிகோ நிறுவனத்திற்கும் மும்பை விமான நிலையத்திற்கும் காரணம் கேட்புக் குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அபராதத்தை 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டுமென இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மைய காலகட்டத்தில் ஒரு விமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுதான் என்று கூறப்படுகிறது.

இம்மாதம் 14ஆம் தேதி கோவாவிலிருந்து டெல்லிக்குக் கிளம்பிய அவ்விமானம், எதிரில் இருப்பது தெரியாத அளவிற்கு டெல்லியில் கடும் பனிமூட்டம் இருந்ததால் மும்பைக்குத் திருப்பிவிடப்பட்டது. களைத்துப்போன பயணிகள், விமானத்திலிருந்து இறங்கி, அதனருகிலேயே தரையில் அமர்ந்து உண்டதைக் காணொளி காட்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!