நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா நகரின் அனைத்துலக விமான நிலையத்தில் இவ்வாண்டிறுதிக்குள் அனைத்துலக விமானச் சேவைகள் வழங்கப்படும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி நித்து சம்ராவும் துணைத் தலைவர் கிறிஸ்டோஃப் ஷ்னெல்மன்னும் தெரிவித்துள்ளனர்.
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துடன் நடந்த நேர்காணலில் அவர்கள் இத்தகவலை வெளியிட்டனர். மேலும், வரும் திங்கட்கிழமை (ஜூன் 15) முதல் அந்த விமான நிலையத்தில் வர்த்தக விமானச் சேவைகள் தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

