ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை: இந்திய உச்சநீதிமன்றம்

இந்திய உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க மறுத்துள்ளது. 

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தில் எந்தத் தவறும் இல்லை என்றும் அது கூறியுள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு வியாழக்கிழமை (மே 18) தீர்ப்பளித்தது. 

தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணங்கள் மனநிறைவு அளிக்கும் வகையில் உள்ளன என்றும் அது எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

ஜல்லிக்கட்டு, தமிழகக் கலாசத்த்துடன் கலந்துள்ளது என்று நீதிமன்றம் கூறியது. 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதனை எதிர்த்து தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடந்தன.

அதன் விளைவாக, தமிழக அரசு சட்டத் திருத்தம் செய்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியது. 

ஆனால், அதனை எதிர்த்து ‛பீட்டா' அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன்பின்னர் வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!