பாட்னா: எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் (2025-2030) ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பீகார் மாநிலத்தில் இதுவரை 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கு படிப்படியாக எட்டப்படும். 2030க்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி, இலக்கை இரட்டிப்பாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தொழில்துறை பிரிவுகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பீகார் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணையம் இன்னும் விவரம் அறிவிக்காமல் உள்ளது.