ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுப்பயணிகள்மீது ஏப்ரல் 22ஆம் தேதி தாக்குதல் நடத்தினர்.
26 பேரின் உயிரைக் குடித்த அத்தாக்குதலைக் கண்டித்து, ‘கிரேட்டர் காஷ்மீர்’, ‘ரைசிங் காஷ்மீர்’, காஷ்மீர் உஸ்மா’, ‘அப்தாப்’, ‘தய்மீல் இர்ஷாத்’ ஆகிய அம்மாநில ஆங்கிலம், உருது மொழி நாளிதழ்களின் முதல் பக்கங்கள் புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) கறுப்பு நிறத்தில் வெளியாகின.
கிரேட்டர் காஷ்மீர்’ என்ற ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில், “கொடூரம்: இடிந்தது காஷ்மீர்; காஷ்மீரிகள் துயரம்,” என அச்சிடப்பட்டிருந்தது.
மேலும், “பசும் புல்வெளிகளின் மீது நடத்தப்பட்ட படுகொலை; காஷ்மீரின் ஆன்மாவைக் காப்பாற்ற வேண்டும்,” என்ற தலைப்பில், ஆங்கில நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.