ஈரானுக்கு பணம், தங்கம் நன்கொடை வழங்கிய காஷ்மீரிகள்

ஈரானுக்கு பணம், தங்கம் நன்கொடை வழங்கிய காஷ்மீரிகள்

2 mins read
683af132-4c21-4106-a06a-96bba05a234a
காஷ்மீர் மக்​கள் பணமாக மட்​டுமல்​லாமல், தங்​கம், வெள்ளி நகைகள், கால்​நடைகள் மற்றும் பாரம்​பரிய செப்​புப் பாத்திரங்களை​யும் ஈரானுக்கு நன்​கொடை​யாக வழங்​கினர். - படங்கள்: இந்து தமிழ் திசை

ஸ்ரீநகர்: போ​ரால் பாதிக்​கப்​பட்​டுள்ள ஈரானுக்கு காஷ்மீர் மக்​கள் பணம் முதல் தங்​கம் வரை தாராள​மாக நன்கொடை வழங்கி உள்​ளனர். மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் பாதிக்​கப்​பட்​டுள்ள ஈரான் மக்களுக்கு ஆதர​வாக, காஷ்மீரின் பட்​காம், பாரமுல்லா மாவட்​டங்​களைச் சேர்ந்த மக்​கள் மனிதாபிமான அடிப்​படை​யில் உதவி வழங்கத் தொடங்கியுள்​ளனர்.

ஈகைத் திரு​நாள் (ரம்​ஜான்) கொண்​டாட்​டங்​களைத் தொடர்ந்​து, ஷியா பிரிவு மக்​கள் அதி​கம் வாழும் பகு​தி​களில் தன்​னார்​வலர்​கள் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருள்களைச் சேகரித்​தனர்.

அப்​போது மக்​கள் பணமாக மட்​டுமல்​லாமல் தங்​கம், வெள்ளி நகைகள், கால்​நடைகள் மற்றும் பாரம்​பரிய செப்​புப் பாத்​திரங்​களை​யும் நன்​கொடை​யாக வழங்​கினர்.

ஈரான் தூதரகம் நன்றி

இந்​தி​யா​வுக்​கான ஈரான் தூதரகம் இதுகுறித்த புகைப்​படங்​களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்​களில் பகிர்ந்துள்​ளது. ஈரானை மீண்​டும் கட்​டி​யெழுப்​புவதற்​காக பணம் மற்றும் நகைகளை வழங்​கிய இந்​தி​யர்​களின் ‘அன்பு’ மற்​றும் ‘மனி​தாபி​மானத்​துக்​கு’ அந்நாட்டு தூதரகம் நன்றி தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து ஈரான் தூதரகத்தின் எக்ஸ் பக்​கத்​தில், ‘‘நன்​றி​யால் நிறைந்த இதயங்​களு​டன், காஷ்மீரின் அன்​பான மக்​கள் தங்​களின் மனி​தாபி​மான ஆதரவு, மனப்​பூர்​வ​மான ஒற்றுமையின் மூலம் ஈரான் மக்​களு​டன் உறு​துணை​யாக நிற்​ப​தற்கு நாங்​கள் மனமார்ந்த நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம். இந்த அன்பு ஒரு​போதும் மறக்​கப்​ப​டாது. நன்​றி, இந்​தி​யா,” எனப் பதி​விடப்​பட்​டுள்​ளது.

ஆண்​கள், பெண்​கள், குழந்​தைகள் என சமூகத்தின் அனைத்​துத் தரப்பு மக்​களும் இந்த நடவடிக்கையில் பங்​கேற்​றனர். பல பெண்​கள் தங்​களின் தனிப்​பட்ட தங்க நகைகளை​யும் மதிப்​புமிக்க வீட்டு உபயோகப் பொருள்​களை​யும் தான​மாக வழங்​கினர்.

குறிப்​பாக, காஷ்மீரைச் சேர்ந்த கைம்பெண் ஒருவர், மறைந்த தன் கணவரின் நினை​வாக 28 ஆண்​டு​களாகப் பாது​காத்து வந்த தங்க நினை​வுப் பதக்​கத்தை ஈரான் மக்களுக்​காக வழங்​கி​யுள்​ளார்.

இதுகுறித்து ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்​தில், “காஷ்மீரைச் சேர்ந்த ஒரு சகோ​தரி, 28 ஆண்​டு​களுக்கு முன்பு காலமான தனது கணவரின் நினைவாக வைத்​திருந்த தங்​கப் பதக்கத்​தை ஈரான் மக்​கள் மீதான அன்பு மற்​றும் ஒற்றுமைக்​காக வழங்​கி​யுள்​ளார். உங்களின் கண்ணீரும் தூய உணர்​வு​ம் ஈரான் மக்​களுக்கு மிகப்​பெரிய ஆறு​தலாகும்,’’ என கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்