நீச்சல் தேர்வில் தோற்ற கடலோரக் காவற்படையினர்

கொச்சி: தன் படையினரில் நால்வரில் ஒருவர் நீச்சல் தேர்வில் தோல்வியுற்றதால் இந்தியாவின் கேரள மாநிலக் கடலோரக் காவல்துறைக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

அவர்களில் சிலருக்கு நீச்சலே தெரியாது என்பதுதான் அதிர்ச்சியான தகவல். வேறு சிலரால் இரண்டு நிமிடங்களுக்குள் 50 மீட்டர் தொலைவைக்கூட கடக்க முடியவில்லை.

அண்மையில் கேரளக் கடலோரக் காவல்துறையின் பொறுப்பாளராகத் தலைமை ஆய்வாளர் ஜி பூங்குழலி பதவியேற்றார். அவர் நீச்சல் தேர்வுக்கு உத்தரவிட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 580 அதிகாரிகள் அதில் பங்கேற்றனர். இம்மாதத் தொடக்கத்தில் அத்தேர்வு நடத்தப்பட்டது.

நீச்சல் தேர்வில் தோற்றவர்கள், நீச்சல் வல்லுநர்கள் நடத்தும் 21 நாள் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டப் பயிற்சியில் தேறுவோர் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தொடங்கும் இரண்டாம் கட்டப் பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.

‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் முக்குளிப்புப் பயிற்சியும் அதில் அடங்கும்.

மேலும், மார்ச் 15ஆம் தேதிமுதல் இந்தியக் கடற்படையின் துணையுடன் கேரளக் கடலோரக் காவல்துறையினருக்கு மீட்பு நடவடிக்கைகளில் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!