கொலையாளிகளைப் பிடிக்க உதவிய ‘கிங் கோஹ்லி’

இந்தியாவின் பெங்களூரு நகரில் 82 வயது மூதாட்டியைக் கொலை செய்த மூன்று கொலையாளிகளைப் பிடிக்க ‘கிங் கோஹ்லி’ என்ற வாசகம் உதவியுள்ளது.

மகாலட்சுமிபுரம் என்ற இடத்தில் கமலா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார்.

அவரிடம்  கடன் பெற்ற சந்தேக நபர்கள் கடனைத் திருப்பிக்கொடுக்காததால் அவரை மே 27ஆம் தேதி கொலை செய்துள்ளார்.

மூதாட்டி இறந்தது சில நாள்களுக்கு பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

சந்தேக நபர்கள் ‘கிங் கோஹ்லி’ என்ற வாசகத்தை அவரது ஆட்டோவின் பின்பக்கத்தில் எழுதியுள்ளார்.

கொலை நடந்த வட்டாரத்தில் ஆடவர் ஆட்டோவில் பதிவு எண் இல்லாமல் சில முறை நோட்டமிட்டுள்ளார். 

ஆடவர் ஆட்டோவில் வந்து நோட்டமிடுவது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகின.

இருப்பினும் பதிவு எண் இல்லாததால்  சந்தேக நபரைப் பிடிக்க சிக்கல் எழுந்தது. அப்போது தான் ஆட்டோவில் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. 

அதன் பின்னர் நடத்திய புலன் விசாரணை மூலம் சந்தேக நபர்கள் மூவரும் மைசூரு பகுதியில் பிடிபட்டனர். 

ஆடவர்கள் திட்டமிட்டு மூதாட்டியைக் கொன்றதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!