ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: நெடுஞ்சாலை மூடப்பட்டது

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: நெடுஞ்சாலை மூடப்பட்டது

1 mins read
6bd59550-2f93-4ab5-84cb-d640a3da086d
லகாமா என்ற இடத்​தில் நிலச்​சரிவு ஏற்​பட்​டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம்: இந்து தமிழ் திசை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்​சரிவு காரணமாக, அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

லகாமா என்ற இடத்​தில் ஞாயிற்றுக்கிழமை ​காலை (மே 3) இந்த நிலச்​சரிவு ஏற்​பட்​டதாகவும் இதனால் பார​முல்லா-உரி பகுதியில் உள்ள நெடுஞ்​சாலை மூடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அவ்வழியே சென்ற அனைத்து வாகனங்களும் பந்தி-பரன்​பிலன்-டாச்சி வழி​யாக உரி பகுதிக்குத் திருப்பி விடப்​பட்​டன.

நிலச்சரிவால் ஏற்பட்ட இடி​பாடு​கள் அகற்​றப்​பட்​ட பின்னர் அப்பகுதியில் போக்​குவரத்து மீண்​டும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, புதிதாகக் கட்டப்பட்ட பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததால் ஜம்​மு​வின் பந்​தலா பகு​தி​யில் பரபரப்பு நிலவியது.

பாலம் இடிந்து விழுந்​த விபத்தில் மூன்று ஊழியர்கள் பரிதாபமாக மாண்டுபோயினர்.

குறிப்புச் சொற்கள்