சிறுத்தை வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு

லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், சம்பால் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூரில் சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

சிறுத்தை நுழைந்ததும் அவ்வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ஓர் அறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர்.

உடனடியாக, உள்ளூர்க் காவல்துறைக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒருவழியாக அவ்வீட்டிற்குள் புகுந்த அதிகாரிகள், வலைபோட்டு சிறுத்தையைப் பிடித்தனர். வலையிலிருந்து சிறுத்தை தப்பிக்க முயன்றதால் காவல்துறை அதிகாரிகள் அதன்மீது ஒரு கட்டிலைப் போட்டனர்.

காவல்துறை அதிகாரிகள் குறைந்தது பத்துப் பேர் கையில் தடியுடன், சிறுத்தையைத் தப்பிக்க விடாமல் கட்டிலைப் பிடித்திருந்ததைக் காணொளி காட்டியதாக ‘என்டிடிவி’ செய்தி குறிப்பிட்டது.

இறுதியில் காவலர்களிடம் சிக்கிய சிறுத்தை, பின்னர் இறந்துபோனது.

சிறுத்தையை மீட்க முயன்றபோது காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் காயமடைந்தார்.

அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து அச்சிறுத்தை ஊருக்குள் புகுந்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!