மத்தியப் பிரதேசம்: துப்பாக்கி முனையில் ரூ.15 கோடி கொள்ளை

மத்தியப் பிரதேசம்: துப்பாக்கி முனையில் ரூ.15 கோடி கொள்ளை

1 mins read
2cd105a6-3775-4878-aaff-1709b6ec2856
மத்தியப் பிரதேசத்தின் சிங்க்ராவ்லி மாவட்டத்தில் உள்ள வங்கி ஒன்றில் பணம், நகைகளைக் கொள்ளையடித்த ஐவர் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர். - படம்: என்டிடிவி

போபால்: மத்தியப் பிரதேசத்தில் சிங்க்​ராவ்லி மாவட்​டத்​தில் உள்ள மகாராஷ்டிர வங்கிக் கிளையில், கொள்ளையர் ஐவர் துப்பாக்கியுடன் நுழைந்து, வங்கி அதிகாரிகளைத் துப்பாக்கி முனையில், அச்சுறுத்தி கிட்டத்தட்ட ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகளையும் ரொக்கத்தையும் கொள்ளை அடித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வங்​கிக் கிளைக்குக் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) பிற்​பகலில் இரண்டு பேர் வாடிக்​கை​யாளர்​கள்போல வந்​தனர். அவர்​கள் உள்ளே வந்​தவுடன் அடுத்​த​தாக மூன்று பேர் உள்ளே நுழைந்​தனர். உள்ளே வந்​ததும் ஐந்து பேரும் தங்​களிட​மிருந்த துப்​பாக்​கி​களை எடுத்து மேல்நோக்கிச் சுட்டு வாடிக்​கை​யாளர்​களை அச்சுறுத்தினர். அனை​வரை​யும் துப்​பாக்கி முனை​யில் மிரட்டி வங்கி மேலா​ளரை அழைத்து லாக்​கர் சாவி​களைக் கேட்​டனர்.

அக்கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்து இருபதே நிமிடங்களில் பணம், நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

9 முதல் 10 கிலோ எடை​யுள்ள தங்க நகைகள், ரூ.20 லட்​சம் ரொக்​கம் என மொத்​தம் ரூ.15 கோடி மதிப்​புள்ள பொருள்கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டுள்​ளதாக சிங்க்​ராவ்லி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பி. மணீஷ் காத்ரி கூறியுள்ளார்.

கண்காணிப்பு கேமராப் பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையர்களைக் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் முகக் கவசம் அணியாததால் அவர்களை விரைவில் கண்டுபிடித்துவிடலாம் என்று காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்