நவம்பர் 2வது வாரம் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் நடக்கலாம்

1 mins read
7f05aa74-7502-440e-9d9c-a83897e4e22f
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

மும்பை: நவம்பர் 2வது வாரத்தில் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என அந்த மாநிலத்தில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது நல்லதாக இருக்கும். மஹாயுதி கூட்டணியில் மெரிட் மற்றும் சிறந்த ஸ்டிரைக் ரேட் தொகுதி பங்கீட்டிற்கு வரையறையாக இருக்கும். இன்னும் 8 முதல் 10 நாள்களுக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்.

“வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தியுள்ளோம். திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கியுள்ளோம்.

“அவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கும். இந்த இலக்கு 10 லட்சம் இளைஞர்கள் என்பதாகும்.

“லட்கி பாகின் திட்டத்தின் கீழ் 1.6 கோடி பெண்கள் நிதியுதவி பெறுகிறார்கள். 2.6 கோடி பெண்கள் என்பதுதான் எங்கள் இலக்கு,” என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுடன் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் அதிக அளவில் பாதுகாப்புப்பணி தேவைப்படுவதால் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்