தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகாராஷ்டிரா: தேர்தல் முடிவுகளில் மர்மம் உள்ளது: உத்தவ் தாக்கரே

1 mins read
7a1a8b72-e901-410d-ad23-6d3f417c11d1
மகாராஷ்டிரா சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே. - கோப்புப் படம்: ஊடகம்

மும்பை: மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பார்க்காதது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா படுதோல்வி கண்டது. 95 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த தேர்தல் முடிவு யார் உண்மையான சிவசேனா என்பதை நிரூபித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே அதிர்ச்சியும், ஏமாற்றமும் தெரிவித்தார். இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், “மராட்டிய சட்டமன்றத் தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பாராதது மற்றும் புரிந்துகொள்ள முடியாதது. இதற்கு பின்னால் ஏதோ மர்மம் உள்ளது. இதனை ஏற்றுக்கொள்வது கடினம். தொடர்ந்து போராடுவேன்,” என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

குறிப்புச் சொற்கள்