முறைகேடு புகார்: மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் மறுதேர்தல்

முறைகேடு புகார்: மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் மறுதேர்தல்

2 mins read
360826f2-5d3d-4b38-bfdc-2e28b2346442
பல இடங்களில் தேர்தல் அலுவலர்களே வாக்​காளர்​களுக்கு வழிகாட்​டு​வதுபோல் வாக்​குப்​ப​திவு அறைக்​குள் நுழைந்து முறை​கேடு​களில் ஈடுபட்டதும் காணொளிப் பதிவு​கள் மூலம் உறுதியானது. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள பால்டா தொகு​தி​யில் வாக்​குப்​ப​தி​வின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, அங்கு வரும் 21ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பால்டா சட்டமன்றத் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கறுப்பு நிற டேப் ஒட்டப்பட்டிருந்தது என்றும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க இயலாமல் மிரட்டப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

வாக்​குப்​ப​திவு இயந்​திரங்களில் உள்ள பொத்​தான்​களில் வாசனைத் திர​வி​யம், மை பூசி, வாக்​களித்​து​விட்டு வரும் வாக்​காளர்​களின் விரல்​களில் தேங்கியுள்ள வாசனை, மை நிறம் ஆகியவற்றைக் கொண்டு யாருக்கு வாக்களித்தனர் என்பதை சில தரப்பினர் கண்டறிந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில சட்​ட​விரோதச் செயல்களும் பல வாக்​குச் சாவடிகளில் அரங்​கேறி​யுள்​ளன. இது வாக்​களிப்​ப​தன் ரகசி​யத் தன்​மையை முற்​றி​லு​மாகச் சிதைப்பதாக அமைந்​துள்ளது எனத் தேர்​தல் ஆணை​யம் தெரிவித்துள்ளது.

தாங்கள் அரசியல் கட்சியினரால் மிரட்டப்பட்டதை வாக்காளர்களும் உறுதி செய்துள்ளனர். மேலும், பல இடங்களில் தேர்தல் அலுவலர்களே வாக்​காளர்​களுக்கு வழிகாட்​டு​வதுபோல் வாக்​குப்​ப​திவு அறைக்​குள் நுழைந்து முறை​கேடு​களில் ஈடுபட்டதும் காணொளிப் பதிவு​கள் மூலம் உறுதியானது.

பலர் கள்ள வாக்கு செலுத்தியது, ஒரே நபர் பலமுறை குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்களித்தது ஆகிய முறைகேடுகளும் அம்பலமாகியுள்ளன.

இதையடுத்து மேற்கு வங்கத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி​யின் பரிந்​துரையை ஏற்​று, பால்டா தொகு​தியில் மீண்டும் தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மே 21ஆம் தேதி அங்குள்ள 285 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் மே 24ஆம் தேதி எண்ணப்படும்.

குறிப்புச் சொற்கள்