தவறான எண்ணில் அழைத்ததற்காக ஆடவர் அடித்துக் கொலை

பாட்னா: கைப்பேசியில் தவறான எண்ணை அழைத்ததற்காக 26 வயது ஆடவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

போஜ்பூர் மாவட்டம், ஆரா நகரை ஒட்டிய மஜாவன் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் ராகேஷ் சிங்.

கடந்த சனிக்கிழமை ரோஷன் குமார் என்ற நண்பருடன் தம் ஊரிலிருந்த காளி கோவில் அருகே ராகேஷ் நின்றிருந்தார். அப்போது, தவறுதலாக அதே ஊரைச் சேர்ந்த புல்ச்சுல் என்பவரை ராகேஷ் தமது கைப்பேசி வழியாக அழைத்துவிட்டார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. கைப்பேசி வழியாகவே இருவரும் சண்டை போட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணியளவில் அவ்விடத்திற்குச் சென்ற புல்ச்சுல், ராகேஷை அடித்து உதைத்ததோடு, கம்பாலும் தாக்கியதாகக் கூறப்பட்டது.

தன்னையும் புல்ச்சுல் தாக்கியதாகவும் சுயநினைவிழந்த ராகேஷை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டதாகவும் ரோஷன் கூறினார்.

தகவலறிந்து வந்த ராகேஷின் குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனையடுத்து, புல்ச்சுல் உள்ளிட்ட நால்வர்மீது வழக்கு பதிந்த காவல்துறை, தலைமறைவாகிவிட்ட அவர்களைத் தேடி வருகிறது.

உயிரிழந்த ராகேஷ் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காவலர் தேர்வில் பங்கேற்கவிருந்ததாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!