தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வங்கிப் பணத்தைத் திருடி சூதாடிய மேலாளர் கைது

1 mins read
5fdcb008-cde0-4a3f-af05-c2a449f09f55
படம்: - பிக்சாபே

புதுடெல்லி: பீகாரில் இருக்கும் ‘கோட்​டக் மகேந்​திரா’ வங்​கி​யின் கிளை ஒன்றில் மேலா​ளராகப் பணியாற்றிய ஆடவர் ஒருவர், வங்கிப் பணத்தை எடுத்து சூதாடியதாகக் கூறப்பட்டது.

பந்தய, சூதாட்டச் செயலிக்கு அடிமையான அந்த ஆடவர் கடந்த ஈராண்டுகளாகப் பீகார் அரசின் வங்​கிக் கணக்​கி​லிருந்து கோடிக்​கணக்​கான பணத்தைத் திருடி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்​பாக, பீகார் அரசின் மாவட்ட நிலம் கையகப்​படுத்​தும் பணியில் இருக்கும் அதி​காரிக்​கான காசோலைகளில் போலி கையெழுத்து இட்டும் போலி காசோலைகளைத் தயாரித்தும் அந்த நபர் மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

மொத்​தம் ரூ.31.93 கோடி வங்கி பணத்தை அந்த மேலாளர் சுருட்டியதாகச் சொல்லப்பட்டது..

பிடிப​டா​மல் இருக்க, வாடிக்​கை​யாளர்​களின் ஆதார் விவரங்​களைச் சட்​ட​விரோத​மாகப் பயன்​படுத்தி 21 போலி வங்​கிக் கணக்​கு​களை அவர் திறந்ததாகவும் அவற்றில் பணத்தை பரி​மாற்​றம் செய்​து, அந்​தப் பணத்தை வெளி​நாடு​களில் உள்ள சட்​ட​விரோத பந்தயச் செயலிகளுக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளரைக் காவல்துறை கைதுசெய்தது.

குறிப்புச் சொற்கள்