தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓராண்டுக்குள் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் வேரறுக்கப்படும்: சத்தீஸ்கர் காவல்துறை அதிகாரி சுந்தரராஜ் உறுதி

2 mins read
c295e2d3-eaa3-4fa8-9c13-b18be72fc97e
சத்தீஸ்கர் காவல்துறை மூத்த அதிகாரி சுந்​தரராஜ். - படங்கள்: இந்திய ஊடகம்

ராய்ப்பூர்: ஓராண்​டுக்​குள் சத்தீஸ்​கரில் மாவோயிஸ்ட் பயங்கர​வாதம் வேரறுக்​கப்​படும் என்று சத்தீஸ்கர் காவல்துறை மூத்த அதிகாரி சுந்​தரராஜ் தெரி​வித்​துள்ளார்.

சத்தீஸ்கரில் தந்தேவாடா, பஸ்தர், பிஜாப்​பூர், நாராயண்​பூர் உள்ளிட்ட மாவட்​டங்​களில் மாவோ​யிஸ்ட் பயங்கர​வா​தி​களின் ஆதிக்கம் உள்ளது. சத்தீஸ்கர் காவல்துறை​யின் மாவட்ட ரிசர்வ் அட்டை, சிறப்பு அதிரடிப்​படை, மத்திய அரசின் சிஆர்​பிஎப் படையைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள் ஒன்றிணைந்து மாவோ​யிஸ்ட் பயங்கர​வா​திகளை வேட்​டை​யாடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தச் சூழலில் சத்தீஸ்​கரின் பஸ்தர் பகுதி காவல்துறை உயர் அதிகாரி சுந்​தரராஜ் கூறிய​தாவது: “கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை சத்தீஸ்​கரில் 310 மாவோ​யிஸ்ட் பயங்கர​வா​திகள் சுட்டுக் கொல்​லப்​பட்​டுள்ளனர். தற்போது சுமார் 400 பயங்கரவா​திகள் மட்டுமே வனப்​பகு​தி​களில் பதுங்கி உள்ளனர். அவர்களை வேட்​டை​யாடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்ளது. மாவோ​யிஸ்ட் மத்திய குழுவைச் சேர்ந்த பலர் அதிரடி தாக்குதலில் சுட்டுக் கொல்​லப்​பட்டு உள்ளனர்.

“அடுத்த ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் சத்தீஸ்​கரில் மாவோ​யிஸ்ட்பயங்கர​வாதத்தை ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி பூண்​டுள்​ளார். இதன்படி ஓராண்​டுக்​குள் சத்தீஸ்கர் முழு​வதும் மாவோ​யிஸ்ட் பயங்கர​வாதம் வேரறுக்​கப்​படும். மாவோ​யிஸ்ட் பயங்கரவாத அமைப்பு​களில் இணைந்​திருக்​கும் பயங்கர​வா​திகள் ஆயுதங்களை ஒப்படைத்து​விட்டு சரண் அடைய​லாம். அவர்​களுக்கான கதவு திறந்து இருக்​கிறது. இல்லை​யெனில், பாது​காப்புப் படை வீரர்களை அவர்கள் நேருக்கு நேர் எதிர்​கொள்ள நேரிடும். அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு சத்தீஸ்​கரில் வன்முறையே நடைபெறாது என்ப​தற்கு உத்தர​வாதம் கொடுக்க முடி​யாது. மாவோ​யிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதி​களில் பாது​காப்புப் படை வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடு​வார்​கள்,” என்று தெரிவித்தார்.

“மக்கள் வளர்ச்​சியை விரும்​பு​கின்​றனர். தங்கள் பகுதி​களில் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்​வ​தில் ஆர்வம் காட்டு​கின்​றனர். மக்களின் தேவைகளை நிறைவேற்று​வ​தில் காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது,” என்றும் அவர் தெரி​வித்​துள்ளார்.

சத்தீஸ்​கரில் மாவோ​யிஸ்ட் பயங்கரவா​திகளை வேட்​டை​யாடும் பணிக்குத் தலைமையேற்று இருக்​கும் ஐஜி சுந்​தரராஜ், தமிழ்​நாட்​டின் கோவை மாவட்டம் சரவணம்​பட்​டியைச் சேர்ந்​தவர். கடந்த 2003ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகப் ப​தவி​யேற்ற அவர், சத்​தீஸ்​கரில் சட்​டம், ஒழுங்கை நிலைநாட்ட மிகத் தீ​விரமாகப் பணி​யாற்றி வருகிறார்​.

குறிப்புச் சொற்கள்