திருமலை: திருப்பதியில் பக்கதர்கள் தங்குவதற்கு வசதியாக ரூ.1,500 கோடி செலவில் புதிய தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது.
அலிபிரி மலையடிவாரப் பகுதியில் உள்ள தேவஸ்தான சிற்பக் கல்லூரி அருகே கிட்டத்தட்ட 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த தங்குவிடுதியைக் கட்ட திருமலை அறங்காவலர் குழு முடிவுசெய்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் அதற்கான திட்ட வரைவைத் தயாரித்து அடிக்கல் நாட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 15,000 முதல் 20,000 பேர் வரை தங்கக்கூடிய அந்தத் தங்கு விடுதி, நடைப்பயணமாக வருவோர் எளிதில் சென்றடையும் வகையில் அமையும்.
பக்தர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், தரிசன முன்பதிவு, உடமைகள் வைக்கும் வசதி உள்ளிட்ட அதிநவீன வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் ஏறத்தாழ 60,000 பேருக்கு மட்டுமே தங்கும் வசதி உள்ளது. அன்றாடம் மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டுவதால் அனைவருக்கும் தங்குமிடம் வழங்குவது தேவஸ்தானத்திற்கு பெரும் சவாலாகவும், சுமையாகவும் உள்ளதால் இப்பிரச்சினைக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

