மின்னணு உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

மின்னணு உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

1 mins read
e3c06269-a2fb-4242-ae79-5007f8b91bc9
மின்​னணு, தகவல் தொழில்​நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: மின்​னணு உதிரி​பாகங்​கள் உற்​பத்தி திட்​டத்​தின் கீழ் பயன்​பெறும் நிறு​வனங்​கள், தங்​களது தயாரிப்புகளை இந்​தி​யா​விலேயே வடிவ​மைக்​கா​விட்​டால் மத்​திய அரசின் மானியங்கள் கிடைக்​காது என்று மின்​னணு, தகவல் தொழில்​நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.

“மானியங்களைப் பெறும் நிறு​வனங்​கள், வெறும் உதிரிபாகங்களை இணைக்​கும் பணி​யோடு நின்​று​வி​டா​மல், உள்நாட்​டிலேயே தயாரிப்​பு​களை வடிவ​மைக்​கும் திறனை மேம்படுத்த வேண்​டும்,” என்று அவர் கூறினார்.

உள்​நாட்​டுத் தொழில் சூழலை வலுப்படுத்​து​வ​தில் அக்​கறை காட்​டாத நிறு​வனங்​களுக்கு மானியங்களை நிறுத்த மத்​திய அரசு தயங்காது என்றும் அமைச்சர் அஸ்​வினி எச்சரித்தார்.

“அரசாங்கம் எதிர்​பார்த்த அளவில் நிறுவனங்களிடமிருந்து ஒத்துழைப்பும் முன்னேற்​றமும் இல்லை. அவற்றின் செயல்​பாடு​கள் ஏமாற்​றம் அளிக்​கின்​றன,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நிறுவனங்கள் தங்​களைச் சீர்​படுத்​திக் கொள்ளாவிட்​டால் மத்​திய அரசு கடுமை​யான முடிவு​களை எடுக்கும் என்றும் அமைச்சர் அஸ்​வினி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்