காசிரங்கா வழித்தடத் திட்டத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார்

2 mins read
cc04d1d9-9f95-489e-ab62-f3b90d86d26f
ரூ.6,957 கோடி மதிப்​பில் அமையவுள்ள காசிரங்கா உயர்​மட்ட வழித்தடத் திட்​டத்​தைப் பார்வையிடும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: எக்ஸ் தளம்/ நரேந்திர மோடி

கெளகாத்தி: அ​சாம் மாநிலத்தில் ரூ.6,957 கோடி மதிப்​பிலான காசிரங்கா உயர்​மட்ட வழித்தடத் திட்​டத்​துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை (ஜனவரி 19) அடிக்​கல் நாட்​டி​னார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் அதிகாரத்துவப் பயண​மாக சனிக்கிழமை அசாம் சென்​றார்.

கின்​னஸ் சாதனைக்​காக போடோ பழங்​குடி​யினக் கலைஞர்​கள் 10,000 பேர் பங்​கேற்ற பகுரும்பா நடன நிகழ்ச்​சியை அவர் பார்​வை​யிட்​டார்.

கெளகாத்தியில் உள்ள அரசு விருந்​தினர் மாளி​கை​யில் தங்கிய திரு மோடி, நகோன், கலி​யா​போர் ஆகிய பகுதிகளுக்கும் சென்​றார்.

அப்போது திரு மோடி ரூ.6,957 கோடி மதிப்​பில் அமையவுள்ள காசிரங்கா உயர்​மட்ட வழித்தடத் திட்​டத்​துக்கு பூமி பூஜை போட்டு அடிக்​கல் நாட்​டி​னார்.

“காசிரங்கா தேசியப் பூங்கா, புலிகள் காப்​பகத்​தில் வனவிலங்​கு​களின் பாது​காப்​பான நடமாட்​டத்தை உறுதி செய்​ய​வும், தேசிய நெடுஞ்சாலை 715ல் ஏற்​படும் சாலை விபத்​துகளைக் குறைக்கவும், சுற்​றுலாவை மேம்​படுத்​த​வும் இந்த வழித்தடம் உதவும்.

அதே வேளை​யில், இது உள்​ளூர் வேலை​வாய்ப்புகளையும் உரு​வாக்​கும்” என்​று அசாம் அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே, திப்​ரூகர்-கோமதி நகர் (லக்​னோ) மற்​றும் காமக்யா - ரோத்​தக் ஆகிய இரண்டு வழித்​தடங்​களில் அம்​ரித் பாரத் விரைவு ரயில்​கள் சேவையைத் திரு மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்​து, பொதுக்​ கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசினார்.

“கட்டமைப்பும் பொருளியலும் இணைந்து முன்​னேற முடி​யும் என்பதை இந்​தியா உலகுக்​குக் காட்​டி​யுள்​ளது.

“அசாமின் வளர்ச்சி ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்​களுக்​கும் வாய்ப்​பு​களை உருவாக்கித் தரும்,” என்றார் திரு மோடி.

‘கிழக்கு நோக்​கிச் செயல்​படும் கொள்​கை’ வடகிழக்குப் பகுதியைப் புதிய உயரத்​துக்கு கொண்டு செல்​லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்