இந்தியா திரும்பினார் மோடி

இந்தியா திரும்பினார் மோடி

1 mins read
ff5ab4b8-5d44-4fb6-bbbc-a137a1d98546
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடு திரும்பினார்.  - படம்: இபிஏ

புதுடெல்லி: போலந்து, உக்ரேன் நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடு திரும்பினார்.

தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர். கடந்த 22ஆம் தேதி போலந்து சென்ற மோடி, அங்கு 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

போலந்து-இந்தியத் தூதரக உறவில் 70 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. 45 ஆண்டுகள் கழித்து போலந்து சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து, ரயில் மூலமாக உக்ரேனுக்குச் சென்றார் மோடி. அங்கு அந்நாட்டு அதிபரைச் சந்தித்துப் பேசினார். உக்ரேன் அதிபருடனான சந்திப்பின்போது, அவ்வட்டாரத்தில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என மோடி உறுதி அளித்தார்.

குறிப்புச் சொற்கள்