அனுமார் வந்துவிட்டதாக பக்தர்கள் பரவசம்!

ராமர் கோவில் கருவறைக்குள் புகுந்த குரங்கு

புதுடெல்லி: புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் குரங்கு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இவ்வாரம் திங்கட்கிழமை (ஜனவரி 22) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 5.50 மணியளவில் கோவிலின் தெற்கு வாயில் வழியாக நுழைந்த ஒரு குரங்கு, கருவறைக்குள் புகுந்தது. அது ராமர் சிலைக்கு அருகே சென்றது.

இதனால் பதற்றமடைந்த பாதுகாவலர்கள், குரங்கு இறைவனின் சிலையைச் சேதப்படுத்திவிடப் போகிறதே என முதலில் கவலைப்பட்டு உள்ளே ஓடியதாக ராம ஜென்மபூமி கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால், அக்குரங்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாமல், கருவறையைக் கடந்து, வடக்கு வாயிலை நோக்கிச் சென்றது. அந்த வாயில் மூடப்பட்டிருந்ததைக் கண்டதும், பின்னர் கிழக்கு நோக்கி அது திரும்பியது.

அங்கு திரளாகக் கூடியிருந்த பக்தர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கிழக்கு வாயில் வழியாக அது வெளியேறியது.

ராமபிரானின் ஆசி பெறவும், அவருக்குத் தொடர்ந்து காவலாக இருக்கவும் அனுமார் வந்துவிட்டதாக இந்நிகழ்வை பக்தர்கள் பலரும் உருவகப்படுத்திக் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!