தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்: 2027 டிசம்பரில் முதல்கட்ட ரயில் பாதை திறப்பு

1 mins read
b9427722-7f59-4961-a23c-02b29d911f2a
புல்லட் ரயில் சேவைக்காக 4.88 கிலோமீட்டர் நீள சுரங்​கப்​பாதை சனிக்கிழமை (செப்டம்பர் 20) தோண்டி முடிக்​கப்​பட்​டது. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மும்​பை-அகம​தா​பாத் புல்​லட் ரயில் பாதை திட்​டத்​தின்கீழ் இந்தியாவின் மகா​ராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே மாவட்​டத்​தில் 4.88 கிலோமீட்டர் நீள சுரங்​கப்​பாதை சனிக்கிழமை (செப்டம்பர் 20) தோண்டி முடிக்​கப்​பட்​டது.

இந்திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் முன்​னிலை​யில் இறுதி அகழ்​வுப் பணி நடை​பெற்​றது.

“புல்​லட் ரயில் நடுத்தர வர்க்​கத்​தினருக்​கான போக்​கு​வரத்​தாக இருக்​கும். இதன் கட்​ட​ணங்​கள் நியாய​மான​தாக இருக்​கும். மும்பை - அகம​தா​பாத் பயண நேரத்தை 9 மணி நேர​மாக கூகல் வரைப்படச் செயலி காட்​டு​கிறது. புல்​லட் ரயி​லில் 2 மணி 7 நிமிடங்​களில் இப்பயணத்தை முடித்துவிடலாம்.

“புல்​லட் ரயில் திட்​டத்​தில் சூரத்​-பில்​மோரா இடையி​லான முதல் பிரிவு 2027 டிசம்​பரில் தொடங்​கப்​படும். 2028ல் தானே​வும் 2029ல் பாந்த்ரா குர்லா காம்பிளக்​சும் இணைக்​கப்​படும். காலை, மாலை உச்சவேளைகளின்போது அரை மணி நேரத்​துக்கு ஒரு ரயில் இயக்​கப்​படும். இந்த வழித்​தடம் முழுமை அடைந்​தவுடன் நெரிசல் நேரங்​களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்​கப்​படும். மும்பை - அகம​தா​பாத் பயணத்​திற்கு பயணச் சீட்டு முன்​ப​திவு தேவை​யில்​லை. பயணி​கள் ரயில் நிலை​யம் வந்து ரயி​லில் ஏறிச் செல்​லலாம்” என்று அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார்.

குறிப்புச் சொற்கள்