மும்பை குண்டுவெடிப்பு: 12 பேர் விடுவிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

1 mins read
66ba9c6c-b751-44af-b208-2584fbf5c452
குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களில் சிலர். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: ​மும்பை ரயில் குண்​டு​வெடிப்பு சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்த வழக்கில் 12 பேர் விடுவிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கடந்த 2006ஆம் ஆண்டில் மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​ததில் 189 பேர் மாண்டனர்.

இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் 12 பேர் குற்​ற​வாளி​கள் எனத் தீர்ப்பு அளித்தது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது.

ஆனால், குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் 12 பேரை​யும் விடு​தலை செய்யுமாறு திங்கட்கிழமை உத்​தர​விட்​டது. இதில் அனை​வரும் விடு​தலையாகினர்.

இந்நிலையில், மும்பை உயர் நீதி​மன்ற தீர்ப்பை எதிர்த்து மகா​ராஷ்டிர அரசாங்கம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மனுவை நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், என்​. கோடீஸ்​வர் சிங் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை (ஜூலை 24) விசாரித்தது.

அப்​போது, குற்​ற​வாளி​களை விடு​வித்து மும்பை உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்​காலத் தடை விதித்​தது.

மேலும் இந்த மனு தொடர்​பாக பதில் அளிக்​கு​மாறு அனைத்து குற்​ற​வாளி​களுக்​கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப உத்​த​ரவிடப்பட்டது.

அதே சமயத்தில் விடுதலை செய்​யப்​பட்ட குற்​ற​வாளி​களை மீண்​டும் சிறை​யில் அடைக்க வேண்​டும் என எந்​த உத்​தர​வும்​ பிறப்​பிக்​கப்பட​வில்​லை.

குறிப்புச் சொற்கள்