பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்தியக் கப்பல் பட்டறை அதிகாரி கைது

மும்பை: பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கூறி மும்பையிலுள்ள மசகான் கப்பல் பட்டறை அதிகாரி ஒருவரை மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.

கல்பேஷ் பைக்கர், 31, என்ற அந்த ஆடவர் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஓர் அமைப்பிடம் ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பெண்ணைக் கொண்டு விரித்த வலையில் சிக்கிய கல்பேஷ், பின்னர் ரகசியத் தகவலைப் பகிரும்படி மிரட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானிய பெண் உளவாளி ஒருவர் சமூக ஊடகம் வழியாக கல்பேஷுடன் நட்பாகப் பழகியதாகவும் இருவருக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்டது.

ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்காக கல்பேஷ் பணம் பெற்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இதுபற்றித் தங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

“கல்பேஷிடம் விசாரித்தபோது, அவர் கடந்த 2021 நவம்பர் - 2023 மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வழியாக அந்தப் பாகிஸ்தானியப் பெண்ணுடன் அறிமுகமானது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கல்பேஷ் மீதும் அவர் ரகசியத் தகவலை வழங்கியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் உளவாளி மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கல்பேஷ் எத்தகைய தகவலைப் பகிர்ந்துகொண்டார் என்பது பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!