இந்தியாவில் புதன்கிழமை (29 மார்ச்) மட்டும் 2,151 பேருக்குப் புதிதாக கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் 7 பேர் நோய்த்தொற்றால் மாண்டனர்.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் இத்தனைபேர் அந்நாட்டில் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி ஒரே நாளில் 2,208 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது இந்தியாவில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 11,903க்கு உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தினசரி நோய்த்தொற்று சதவீதம் 1.51%ஆகவும், வாராந்திர தினசரி நோய்த்தொற்று சதவீதம் 1.53%ஆகவும் உள்ளது.