லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த மகா கும்பமேளா விழாவின் போது, உலகமெங்கும் இருந்து ஏறக்குறைய 67 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இந்நிலையில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்றாக சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்ததாக தேசியப் பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமா்ப்பித்த புதிய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
சங்கமத்தில் கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தரவுகள் கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், தீா்ப்பாயத்தின் வலைத்தளத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில், நிபுணா் குழுவின் தரவு பகுப்பாய்வில் கண்காணிக்கப்பட்ட மாதிரிகளில் அளவீடுகளின் சராசரி மதிப்பு, அந்தந்த அளவுகோல்களில் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ‘எஃப்சி’ (மலக் கிருமி எண்ணிக்கை) சராசரி மதிப்பு 100 மில்லிக்கு 2,500 அலகுகள் என்ற அனுமதிக்கப்பட்ட வரம்போடு ஒப்பிடும்போது 1,400 ஆகவும் ‘பிஓடி’ (உயிரி ஆக்ஸிஜன் தேவை) லிட்டருக்கு 3 மில்லிகிராம் அல்லது அதற்கு கீழ் இருக்க வேண்டும் என்ற நிா்ணயிக்கப்பட்ட விதிமுறையுடன் ஒப்பிடும்போது 2.56 ஆகவும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை நடைபெற்றது.
மகா கும்பமேளா நிறைவடைந்த பிறகும் சங்கமத்தில் புனித நீராட பக்தா்கள் தொடா்ந்து வருகை தருவதாகக் கூறப்படுகிறது.
அதிக மக்கள் கூட்டம் காரணமாக மகா கும்பமேளா நாள்களில் பிரயாக்ராஜ் வருவதைத் தவிா்த்து விட்ட பலரும், இப்போது வருகை தருகின்றனா்.
இதைக் கருத்தில் கொண்டு சங்கமம் பகுதியில் நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட ‘எல்இடி’ விளக்குகள், உடை மாற்றும் அறைகள், படித்துறைகள் ஆகிய சில ஏற்பாடுகள் ஆண்டு முழுவதும் தக்க வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.