கேரளாவில் ஒருவருக்கு ‘நிபா’ கிருமித்தொற்றுப் பாதிப்பு

கேரளாவில் ஒருவருக்கு ‘நிபா’ கிருமித்தொற்றுப் பாதிப்பு

2 mins read
f4119414-6840-4431-9270-7478bfdef80d
கோழிக்​கோடு மருத்​து​வக் கல்​லூரி​யில் சுவாசக் கருவி உதவி​யுடன் ‘நிபா’ கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. - படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

திருவனந்தபுரம்: கேரளா​வின் கோழிக்​கோட்டைச் சேர்ந்த ஒரு​வர் ‘நிபா’ கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்​யப்​பட்டுள்​ளது.

கடந்த 2018ஆம் ஆண்​டில் கேரளா​வின் கோழிக்​கோடு, மலப்​புரம் பகு​தி​களில் ‘நிபா’ கிருமிப் பரவல் முதன்முறையாகக் கண்​டறியப்​பட்​டது.

அதன்பிறகு அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையே, தற்​போது கோழிக்​கோட்டைச் சேர்ந்த 43 வயது நபருக்கு ‘நிபா’ கிருமித்தொற்று உறுதிசெய்​யப்​பட்டுள்ளது.

கோழிக்​கோடு மருத்​து​வக் கல்​லூரி​யில் சுவாசக் கருவி உதவி​யுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

அவரது குடும்​பத்​தினரும், அவரோடு தொடர்​புடைய​வர்​களும் தனிமைப்​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

இதுகுறித்து கேரள சுகா​தா​ரத் துறை அமைச்​சர் முரளிதரன் செய்தியாளர்களிடம் தகவல் பகிர்ந்தார்.

“நிபா கிருமித்தொற்​றால் பாதிக்​கப்​பட்ட நபர் முதலில் கோழிக்​கோடு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் வெளிநோ​யாளி​யாக சிகிச்சை பெற்​றார்.

அதே மருத்​து​வ​மனை​யில் அவருக்கு ‘எம்​ஆர்ஐ ஸ்கேன்’ எடுக்​கப்​பட்டது. பாதிக்கப்பட்ட நபருக்குச் சிகிச்சை அளித்த மருத்​து​வர்​கள், ‘ஸ்கேன்’ எடுத்த சுகா​தார ஊழியர்​கள் ஆகியோர் தனிமைப்​படுத்தப்பட்டுள்ளனர்,” என்று அமைச்​சர் முரளிதரன் கூறினார்.

கிருமிப்பரவலைத் தடுக்க அமைச்​சர் தலை​மை​யில் திரு​வனந்​த​புரத்​தில் வியாழக்கிழமை (ஜூன் 11) உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் ஒன்றும் நடை​பெற்​றது.

‘ஷிகெல்லா’ பாதிப்பு

இதற்கிடையே, கேரளா​வில் ‘ஷிகெல்லா’ நுண்ணுயிர்த் தொற்று பரவி வரு​கிறது. வயநாடு பகு​தி​யில் உள்ள பள்​ளி​யில் ஒரு மாணவருக்கு வியாழக்கிழமை ‘ஷிகெல்லா’ தொற்று உறுதி செய்​யப்​பட்​டது.

அவரை​யும் சேர்த்து இது​வரை 9 பேர் இந்த நுண்ணுயிர்த் தொற்றால் பாதிக்​கப்​பட்டுள்​ளனர்.

முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக வயநாடு பகு​தியைச் சேர்ந்த 514 மாணவ, மாண​வியர் தனிமைப்​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

மக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
கேரளாநிபாகிருமித்தொற்று