தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீர்நிலைகளை ஆக்கிரமிப்போரிடம் கருணை காட்ட முடியாது: உயர் நீதிமன்றம் உறுதி

1 mins read
55cbff0f-deb2-433c-b563-d6ccfd828c91
மதுரை உள்​ளிட்ட பல்​வேறு பகுதிகளின் நீர்​நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தொடுக்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்தது. - படம்: இந்திய ஊடகம்

மதுரை: நீர்​நிலைகளை ஆக்கிரமிப்போரிடம் கருணை காட்டமுடி​யாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மக்களின் நலன் கருதி நீர்​நிலைகளைப் பாது​காக்க வேண்​டும் என அவர்கள் தெரிவித்தனர்.

மதுரை உள்​ளிட்ட பல்​வேறு பகுதிகளின் நீர்​நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

நீதிப​தி​கள் எஸ். எம்​. சுப்​பிரமணி​யம், ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

நீர்​நிலைகளில் ஆக்​கிரமிப்​பு​களை அனு​ம​திப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே பல வழக்​கு​களில் உத்தரவு பிறப்பித்திருப்பதை நீதிபதிகள் சுட்டினர்.

நீர்​நிலைகளை ஆக்கிரமித்தோர் அங்குப் பல ஆண்டுகளாக வாழ்வதாய்க் கூறப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இலவச பட்டா வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அந்த நடை​முறை​களை நிறைவுசெய்ய ஆறு மாதங்​களாகும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்