‘இந்திய விமான நிலையங்களில் கட்டாய கொவிட்-19 பரிசோதனைக்குத் திட்டமில்லை’

புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

இருப்பினும், விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையைக் கட்டாயமாக்குவதற்குத் திட்டமில்லை என்று சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜேஎன்.1 கொரோனா கிருமித் திரிபு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி புதன்கிழமைவரை அத்திரிபால் 21 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர்.

ஆயினும், இப்போதைக்குக் கவலைப்படத் தேவையில்லை என்றும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 விழுக்காட்டினர் வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெறுவதையே தெரிவுசெய்துள்ளனர் என்றும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.

கொவிட்-19 பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதமும் கூடவில்லை என்று ‘மனோரமா’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவில் கடந்த இரு வாரங்களில் கொவிட்-19 தொற்றால் 22 பேர் இறந்துவிட்டனர்.

அந்நாட்டில் புதிதாக 594 பேரை கொவிட்-19 தொற்றிவிட்டதாக வியாழக்கிழமை பதிவானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!